வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான் – அருள் ரத்தினம் அவர்களின் உரை

“இனமே எழு, உரிமை பெறு” – வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான்.மாமல்லபுரம் மாநாட்டில் அருள் ரத்தினம் அவர்களின் உரை இனம் என்றால் என்ன?இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. தமிழ்நாடு அதில் ஒரு தேசிய இனம். தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு துணை தேசிய இனம் வன்னியர்கள். தேசிய இனம் என்பதற்கான வரையறை:1. ஒரு பொதுமொழி, 2. ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு. 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு. 4. பொதுவான பண்பாடு. 5. ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் – இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் ரீதியான மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.இவை அனைத்தும் வன்னியர்களுக்கு உள்ளது. வன்னியர்கள் ஒரு மிகப்பெரிய இனம்யூதர்கள் 1 கோடியே 50 லட்சம் பேர் – உலகின் மிக வலிமையான இனமாக இருக்கிறார்கள். யூதர்களை விட வன்னியர்களின்…

Read More

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி. சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி. சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி: சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி- சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும்! தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வானிலிருந்து பார்த்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒருபுறத்தில் ததும்பி வழிந்து கொண்டிருந்த மனிதக்கடலுடன் ஒப்பிட்டால் வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர். 15 லட்சத்துக்கும் கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த நிலையில், நெரிசல் காரணமாக மாமல்லபுரத்தை…

Read More

உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீ வா

உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீவா….. சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு உன் அன்புமணி அழைக்கிறேன் வா சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான நான்காம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.

Read More

கரகம் ஏந்தி வரோம் பரம்பரை வாழணுமே திரௌபதி அம்மன் பாடல்

‘கரகம் ஏந்தி வரோம்பரம்பரை வாழணுமேநெருப்பில் ஆடி வரோம்தீமை பொசுங்கணுமேவரங்கள் தா தேவி பாஞ்சாலி!’ சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான மூன்றாம் பாடல் இன்று மருத்துவர் அன்புமணி அவர்களால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது மாநாடு வெற்றிபெறும் விதமாக நமது குல தெய்வமான திரௌபதி அம்மனை வேண்டி மூன்றாம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது

Read More

தமிழக வளர்ச்சியும், சமூகநீதியும் தான் நோக்கம்: அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள்!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் சொன்ன உடனேயே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் மனதில் நிறைக்கச் செய்யும் திறன் சில நிகழ்வுகளுக்கு மட்டும் தான் உண்டு. அவற்றில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். தமிழகத்தின் வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த பெருவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் பிரமாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இந்த மடலை பாட்டாளி சொந்தங்களுக்கு நான் வரைகிறேன். மாநாடுகளை நடத்துவதும், அதன் மூலம் மகத்தான சாதனைகளைப் படைப்பதும் நமது வரலாறுகள். மாமல்லபுரத்தில் வரும் 11&ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவும் அந்த வரலாற்றின் ஓர் அங்கமாக மாறப் போகும் நிகழ்வு தான். 1988&ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சித்திரை முழுநிலவு நாள்…

Read More

பொது மக்களுக்கு டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வேண்டுகோள்.!

பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு’ என்ற பெயரில் வருகிற மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடவுக்கவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், இலட்சினை ஆகியவை வெளியானது. தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள். மே 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர்…

Read More

சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு: பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! – மருத்துவர் இராமதாஸ்

சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு:பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத்தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளில் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல… மாறாக நமது குடும்ப விழா. தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் அனைத்து பாட்டாளி சொந்தங்களும் ஒன்று திரண்டு வந்து உறவாடுவதுடன், உரிமைகளையும் கோரும் விழா தான் அது. அந்த விழா குறித்து நினைக்கும் போதே…

Read More

சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை வெளியீடு

வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO) இன்று ஆன்லைனில் வெளியிட்டார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். இலட்சினை (LOGO) வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே பல லட்சக்கணக்கான வன்னிய இளைஞர்கள் இந்த இலட்சினை (LOGO) அவர்களது சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் படமாக மாற்றி உள்ளதை பார்க்க முடிகிறது. மாநாட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் மாநாட்டுப் பணியில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகம் எங்கும் வாழும் வன்னிய சொந்தங்கள் அனைவரும் வருகின்ற மே 11 சித்திரை முழு நிலவு நாளன்று மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடுவோம் மாபெரும் வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டுவோம்

Read More

சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான இரண்டாம் பாடல்

சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான இரண்டாம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.

Read More