சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு:பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத்தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளில் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல… மாறாக நமது குடும்ப விழா. தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் அனைத்து பாட்டாளி சொந்தங்களும் ஒன்று திரண்டு வந்து உறவாடுவதுடன், உரிமைகளையும் கோரும் விழா தான் அது. அந்த விழா குறித்து நினைக்கும் போதே…
Read More