தமிழக வளர்ச்சியும், சமூகநீதியும் தான் நோக்கம்: அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள்!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் சொன்ன உடனேயே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் மனதில் நிறைக்கச் செய்யும் திறன் சில நிகழ்வுகளுக்கு மட்டும் தான் உண்டு. அவற்றில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். தமிழகத்தின் வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த பெருவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் பிரமாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இந்த மடலை பாட்டாளி சொந்தங்களுக்கு நான் வரைகிறேன். மாநாடுகளை நடத்துவதும், அதன் மூலம் மகத்தான சாதனைகளைப் படைப்பதும் நமது வரலாறுகள். மாமல்லபுரத்தில் வரும் 11&ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவும் அந்த வரலாற்றின் ஓர் அங்கமாக மாறப் போகும் நிகழ்வு தான். 1988&ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சித்திரை முழுநிலவு நாள்…

Read More

பொது மக்களுக்கு டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வேண்டுகோள்.!

பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு’ என்ற பெயரில் வருகிற மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடவுக்கவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், இலட்சினை ஆகியவை வெளியானது. தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள். மே 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர்…

Read More